மேற்கு வங்கத்தில் ரூ.15,000 கோடி மதிப்பிலான பல்வேறு மத்திய அரசின் நலத்திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். இதனைத் தொடர்ந்து, கொல்கத்தா கிழக்கு-மேற்கு மெட்ரோ வழித்தடத்தில் ஹவுரா மைதான் – எஸ்பிளனேட் இடையே நீருக்கு அடியில் கட்டப்பட்டுள்ள மெட்ரோ வழித்தடத்தை தொடக்கிவைத்தார். ஹவுரா மைதான் – எஸ்பிளனேட் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இடையேயான தொலைவு 4.8 கி.மீ., இதற்கிடையே ஆற்றை கடக்க 32 மீட்டர் ஆழத்தில் சுரங்கம் அமைக்கப்பட்டு 520 மீட்டர் நீளத்துக்கு மெட்ரோ பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஹவுரா மைதான் – எஸ்பிளனேட் இடையேயான 4.8 கி.மீ. மெட்ரோ பாதைக்கு மட்டும் ரூ. 4,965 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்தியாவின் முதல் நீருக்கடியில் பயணிக்கும் மெட்ரோ சேவையை தொடங்கி வைத்த பிரதமர், பள்ளி மாணவர்களுடன் பயணம் மேற்கொண்டார்.
கொல்கத்தாவில் நீருக்கடியில் மெட்ரோ ரயில் சேவை – பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.
![](https://paribhasai.in/wp-content/uploads/2024/03/PP-03-1.jpg)