வாங்கல் ரயில் நிலையம் நாளை முதல் மூடப்படுவதாக அறிவிப்பு.

சேலம் ரயில்வே கோட்டத்தில் சேலம்- நாமக்கல்-கரூர் இடையே புதிய அகல ரயில்பாதை அமைக்கப்பட்டபோது மோகனூருக்கும் – கரூருக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள வாங்கல் ரயில் நிலையம் கடந்த 2013ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்த ரயில் நிலையத்துக்கு பயணிகள் வந்து பயணம் மேற்கொள்ளும் வகையில் சேலம்-கரூர் பாசஞ்சர் ரயில் நின்று சென்று வந்தது. ஆனால் அப்பகுதி மக்களிடையே வாங்கல் ஸ்டேசன் பயன்பாடு பெரிய அளவில் இல்லை என கூறப்படுகிறது. இதனால் வாங்கல் ரயில்வே ஸ்டேஷனை மூடுவது தொடர்பாக ரயில்வே நிர்வாகம் ஆலோசித்து வந்தது. இதன் அடிப்படையில் வாங்கல் ரயில்வே ஸ்டேஷனை நாளை முதல் மூடுவதாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் நேற்று அறிவிப்பு வெளியிட்டது. இதன்மூலம் இனிமேல் வாங்கல் ரயில்வே ஸ்டேஷனில் சேலம்-கரூர் ரயில் நின்று செல்லாது. அதேபோல் பயணிகளுக்கான எந்த சேவையும் அங்கிருக்காது. சேலம்-கரூர் ரயில் மோகனூருக்கு அடுத்து கரூரில் தான் நிற்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் 2013ல் திறக்கப்பட்ட வாங்கல் ரயில் நிலையம் 11-வது ஆண்டில் நிரந்தரமாக மூடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!