போதைப்பொருள் வழக்கில் ஜாபர் சாதிக்கின் கூட்டாளி கைது!

ஜாபர் சாதிக் கூட்டாளி சதா என்பவரை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். டெல்லியில் அண்மையில் ரூ.2,000 கோடி சூடோபெட்ரைன் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கடந்த மாதம் 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் மூளையாகச் செயல்பட்ட தமிழ் திரைப்பட தயாரிப்பாளரான ஜாபர் சாதிக்கை விசாரிக்க முயன்றபோது தலைமறைவாகிவிட்டார். இதைத் தொடர்ந்து அவர் வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்க, அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக்-அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. அவரது 8 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டது….

Read More

மக்களவைத் தேர்தல் நேரத்தில் பொய் தகவல்கள் பரவலைத் தடுக்கும் கூகுள்!

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு, நேர்காணல் என தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், தேர்தல் நெருங்குகின்ற சூழலில் பொய்யான தகவல்கள் பரவுவதை தடுக்க கூகுள் நிறுவனத்துடன் இந்திய தேர்தல் ஆணையம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து கூகுள் நிறுவனம் வெளியிட்ட பதிவில், தேர்தலில் எவ்வாறு வாக்களிப்பது உள்பட தேர்தல் சார்ந்த…

Read More

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சொத்து, வீட்டு வரி செலுத்துவதில் விலக்கு!

கடந்த மாதம் 19ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது, முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சொத்து, வீட்டு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அறிவித்தார். இந்நிலையில், நடப்பு நிதியாண்டில் இருந்து முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சொத்து வரி, வீட்டு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் 1.20 லட்சம் முன்னாள் ராணுவ வீரர்கள் பயன் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது….

Read More

குஜராத்தில் ரூ.480 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்!

பாகிஸ்தானிலிருந்து தரைவழி, கடல்வழி, வான்வழியாக இந்திய எல்லைக்குள் போதை பொருட்கள் கடத்தப்படும் சம்பவம் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. கடல்வழியாக இதுபோன்ற கடத்தல்களை தடுப்பதற்காக இந்திய கடற்படை கப்பல்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், குஜராத் எல்லையில் போதை பொருட்கள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவல் அடிப்படையில் கடற்படை, போதை பொருள் தடுப்புப் பிரிவு, குஜராத் காவல்துறை ஆகியவை இணைந்து தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது போதைப்பொருள் தடுப்பு…

Read More

அரியானா மாநில முதல்வராக நயாப் சைனி பதவியேற்கிறார்!

அரியானா மாநிலத்தில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. மனோகர் லால் கட்டார் முதல்வராக இருந்து வந்தார். இரு கட்சிகளும் இணைந்து மக்களவை தேர்தலில் போட்டியிட முடிவு செய்தன. ஜேஜேபி கட்சி தலைவரும், அரியானா மாநிலத்தின் துணை முதல்வராக இருந்த துஷ்யந்த் சவுதாலா டெல்லியில் ஜே.பி. நட்டா உடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை எனத் தெரிகிறது. இதனால் பா.ஜ.க. – ஜேஜேபி இடையிலான கூட்டணி முறிவடைய வாய்ப்புள்ளதாக…

Read More

சமத்துவ மக்கள் கட்சியை சரத்குமார் பா.ஜ.க.வுடன் இணைத்துள்ளார்.

சென்னை தி.நகரில் உள்ள சமத்துவ மக்கள் கட்சி தலைமை அலுவலகத்திற்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை சென்றார். அங்கு சரத்குமாருடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அவரது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, சரத்குமார் தனது சமத்துவ மக்கள் கட்சியை பா.ஜ.க.வுடன் இணைத்துக்கொண்டார். பா.ஜ.க.வுடன் இணைந்தது சமத்துவ மக்கள் கட்சியின் முடிவு அல்ல. மக்கள் பணிக்கான தொடக்கம் என்று கூறினார். மேலும், நாட்டின்…

Read More

போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக நாடு முழுவதும் 30 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை!

நாடு முழுவதும் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையாக சந்தேகத்திற்குரிய அமைப்புகள் மற்றும் நபர்களிடம் தேசிய சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், நாடு முழுவதும் 30 இடங்களில் இன்று என்.ஐ.ஏ. சோதனை நடத்தி வருகின்றனர். பயங்கரவாதிகள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தொடர்பான இடங்களில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், டெல்லி, சண்டிகார், உத்தரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி…

Read More

பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க அரசு முடிவெடுத்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விமான நிலையம் அமைக்க நில எடுப்புக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி காஞ்சிபுரம் அருகே சிறுவள்ளூர் கிராமத்தில் 1.75 லட்சம் சதுர மீட்டர் அளவிலான நிலத்தை எடுப்பதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும், நில எடுப்பு தொடர்பாக சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்கள் 30 நாட்களுக்குள் தங்கள் ஆட்சேபனையை தெரிவிக்கலாம் எனவும்…

Read More

காலிஸ்தான் தீவிரவாதிகளை ஒடுக்க இந்தியாவுடன் கைகோர்த்த பிரிட்டன் – வங்கி கணக்குகள் முடக்கம்.

காலிஸ்தான் தீவிரவாதிகளை ஒடுக்க இந்தியாவுடன் கைகோர்த்த பிரிட்டன் காலிஸ்தான் ஆதரவாளர்களின் 300வங்கி கணக்குகளை முடக்கியுள்ளது. இதுவரை 100 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் 5,000க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் கண்காணிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. எல்லைக்கு அப்பால் இருந்து பயங்கரவாத செயல்கள் இந்தியாவிற்கு பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ள நிலையில் அவற்றை ஒடுக்கும் நடவடிக்கையில் பாஜக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதன் அடிப்படையில், இந்தியாவில் நடத்தப்பட்ட தீவிவாத செயல்களுக்கு…

Read More

குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்தது!

கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதிக்கு முன்பு பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து மத துன்புறுத்தலால் இந்தியாவுக்கு வந்த ஹிந்து, பார்சி, சீக்கிய, கிறிஸ்தவ, புத்த, ஜெயின் மதத்தினருக்கு இந்திய குடியுரிமை வழங்கும் மசோதா 2019ம் ஆண்டு பார்லிமென்டின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதில் குறிப்பிட்ட நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம்களுக்கு மட்டும் குடியுரிமை வழங்கப்படமாட்டாது என எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. நாடு முழுவதும் முஸ்லிம் அமைப்புகளும் போராட்டத்தில் இறங்கின. கடும்…

Read More
error: Content is protected !!