சேலத்தில் திமுக இளைஞரணியின் 2-வது மாநில மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

திமுக இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் இன்று நடைபெறுகிறது. இன்று நடைபெறும் மாநாட்டு திடலுக்கு தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று சென்றடைந்தார். முதலமைச்சரை வரவேற்கும் விதமாக மாநாட்டு திடல் பகுதியில் கம்போடியா கலைஞர்களின் நடனம், கேரள செண்டை மேளம், கதகளி, மயிலாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை திமுக இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்றார். இந்நிலையில், இன்று திமுக இளைஞரணியின் 2-வது மாநில…

Read More

டிடி பொதிகை சேனல் மாற்றி அமைக்கப்படுகிறது – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்.

கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, வருகை புரிந்த மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தை மாதம் பிறந்தது, தமிழகத்தில் சூழ்ந்து இருக்கின்ற இருள் விலகி ஒளிமயமான தமிழகம் வர இருக்கிறது எனத் தெரிவித்தார். மேலும் டிடி பொதிகை புதிய மாற்றத்துடன் மக்கள் விரும்பும் வகையில் மாற்றி அமைக்கப்பட்ட ஒரு புதிய சேனலாக பிரதமர் துவக்கி வைக்க உள்ளார் என்றார். அயோத்தி ராமர்…

Read More

சென்னை மெரினா கடற்கரையில் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை.

நாடு முழுவதிலும் வரும் 26-ம் தேதி குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை அருகில் குடியரசு தின விழா நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும், விழா நடைபெறும் தினம் மற்றும் ஒத்திகை நடைபெறும் நேரத்தில் கலங்கரை விளக்கம் முதல் போர் நினைவுச் சின்னம் வரை வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குடியரசு தின விழாவுக்கான…

Read More

வீட்டு பணிப்பெண் சித்ரவதை.. பல்லாவரம் திமுக எம்எல்ஏ மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு.

சென்னை பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி மகன் வீட்டில் வேலை செய்த, 18 வயது பட்டியல் சமூக இளம் பெண்ணை அவரது மகன் மற்றும் மருமகளால் கடுமையாகத் தாக்கப்பட்டும், சிகரெட்டால் சூடு வைத்தும் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருநறுங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்தவர். இந்த நிலையில் குடும்ப கஷ்டம் காரணமாக இவரது மனைவி செல்வி சென்னை கொளப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வேலை செய்து வருகிறார். சென்னை திருவான்மியூர் பகுதியில்…

Read More

செங்கோட்டை நகராட்சியில் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி… நகர்மன்ற தலைவர் பதவி தப்பியது.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை திமுக நகர் மன்ற தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி திமுக கவுன்சிலர்கள் அதிமுக, பாஜக உட்பட அனைத்து கவுன்சிலர்களும் ஆணையரிடம் கடந்த டிசம்பர் மாதம் மனு அளித்தனர். இதனையடுத்து செங்கோட்டை நகர மன்ற கூட்டரங்கில் வைத்து நடைபெற்று வரும் வாக்கெடுப்பில் மொத்தம் 24 கவுன்சிலர்களில் திமுகவை தவிர மற்ற கட்சிகளை சேர்ந்த 13 பேர் மட்டுமே பங்கெடுத்துள்ளனர். மேலும் வாக்கெடுப்பின் போது பார்வையாளர்கள் மற்றும் ஊடகத்தினருக்கு கூட்டரங்கில் அனுமதி இல்லை என…

Read More

ஏமனில் செயல்படும் ஹவுதி அமைப்பை சர்வதேச பயங்கரவாதிகளாக அறிவித்தது அமெரிக்கா!

வாஷிங்டன்: செங்கடல் சர்வதேச வணிகப் பாதையில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலுக்கு காரணமாக இருப்பதாக ஏமனின் ஹவுதி படையை சர்வதேச பயங்கரவாத குழுவாக அமெரிக்கா அறிவித்துள்ளது. மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே போர் நடந்து வருகிறது. மற்றொரு மேற்காசிய நாடான ஏமனில் இருந்து இயங்கும் ஹவுதி பயங்கரவாத அமைப்பு, ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவு தெரிவித்து, அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வந்தது. இதன் ஒரு பகுதியாக, செங்கடல் வழியாக செல்லும் சரக்கு…

Read More
error: Content is protected !!