ராமர் கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்ட முதல் நாளிலேயே கட்டுக்கடங்காத கூட்டம் கோயிலுக்குள் நுழைந்ததால், கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 3 மணி முதலே, கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் குவியத் தொடங்கினர். முதல் தரிசனத்தை காண வேண்டும் என்ற உந்துதலால் ஆயிரக்கணக்கானோர் இன்று காலையிலேயே கோயிலுக்குள் குவிந்ததால், அங்கு நெரிசல் ஏற்பட்டது. இந்த அளவுக்குக் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் திணறினர். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர பாதுகாப்புப் படையினர் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர். கோயில் முழுக்க பக்தர்கள் கூட்டம் நிரம்பி உள்ளதால், வெளியே செல்லவும், பாதுகாப்புப் படையினர் உள்ளே நுழையவும் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
அயோத்தி ராமர் கோயில் பக்தர்களுக்காக திறக்கப்பட்ட முதல் நாளிலேயே கூட்டம் நிரம்பியுள்ளது.
