இலங்கை கொண்டு செல்லப்படும் சாந்தனின் உடல் – மத்திய, மாநில அரசுகள் தீவிரம்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாந்தன் 2022-இல் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் விடுவிக்கப்பட்டார். அதன் பின்னர், அவர் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார். இலங்கை தமிழரான சாந்தன் கடந்த ஜனவரி 24-ஆம் தேதி உடல் நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்ட அவர், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அதிகாலையில் சாந்தனுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு, காலை 7.50 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக, ராஜீவ் காந்தி மருத்துவமனை டீன் தேரணி ராஜன் அறிவித்தார். ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சாந்தனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதாக அவரின் வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்தார். மேலும், சாந்தனின் உடல் எம்பார்மிங் செய்யப்பட்டு இலங்கைக்கு எடுத்துச் செல்வதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். சாந்தனின் உடலை இலங்கைக்கு அனுப்புவதற்கான ஏற்பாட்டை மத்திய, மாநில அரசு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!